பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி
Supreme Court's verdict in the case of Teacher Eligibility Test is mandatory for promotion
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி
Supreme Court's verdict in the case of Teacher Eligibility Test is mandatory for promotion
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
5 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் கால அளவைக் கொண்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கால அளவு பெற்றுள்ள ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
29/7/2011க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்.
29-07-2011க்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்.
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
ஒரு ஆசிரியர் தனது பணியை தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
ஆசிரியர் தகுதி தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் அவர் அடுத்த நிலை பதவி உயர்வை அடைய முடியும் என்றும் தீர்ப்பு
பதவி உயர்வைத் தாண்டி பணியில் தொடரவே ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமானது
இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள் வருமாறு..
அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்.
ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..
பதவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தீர்ப்பின் முழுமையான விவரம் விரைவில்...
UDISE+ - VERY IMPORTANT INFORMATION
Respected All,
The Student Profile ( *EP GP & FP* ) and *Add Student* option for new admissions will be enabled from September 1, 2025.
*Please note that* Aadhaar is mandatory for all students. Admissions without Aadhaar will not be accepted. This is to ensure that all students obtain their Aadhaar.
*Important Note:*
If a student was admitted last year without an Aadhaar and their details are not reflected in the system, kindly instruct the parents to get Aadhaar for their child. Aadhaar enrollment facilities are available through government channels—please encourage parents to utilize them.
*Admission Process Guidelines:*
Direct admission is allowed only for Grade 1, LKG and UKG.
For higher classes, students must be imported from the drop box if the student is in Dropbox.
If the student is active from another school, their details must be pulled using the " *Student Raise Request"* option.
Regarding the Aadhaar MBU verification and Student Raise Request reports, we have requested student-level reports, which will be made available in the coming days.
*Note* :
As previously informed, all necessary data should be kept ready for updating. *The two options will be enabled only from monday*.
கன்னியாகுமரியில் ஒற்றை மாணவனுக்கு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் செலவிடும் பள்ளிக்கல்வித்துறை
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள இரத்தினபுரம் என்ற கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஐந்து வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் படிக்கிறார்.
அதைவிட ஆச்சரியம் அந்த ஒரு மாணவனுக்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது.
நான்காம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்காக தமிழ்நாடு அரசின் முயற்சி அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் பள்ளியில் இந்த ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்ல, இந்த மாணவனுக்கு விசாலமான வகுப்பறை, பெரிய கலையரங்கம் என அனைத்து வசதிகளும் உள்ளது.
மாதம் சுமார் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெறும் இந்த இரு ஆசிரியர்களும், ஒரு மாணவனின் வருகையை எதிர்நோக்கி அன்றாடம் பள்ளியில் காத்திருக்கின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 24 லட்ச ரூபாய் செலவில் இந்த மாணவனின் கல்விக்காக பள்ளியைத் திறந்து வைத்திருக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் இந்த நடவடிக்கை , இப் பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாணவனுக்காக இவ்வளவு செலவு செய்து பள்ளியை நடத்த வேண்டுமா? என்று ஒரு சிலர் கேட்கையில், ஒரு குழந்தை என்றாலும், கல்விக்காக அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது தானே என்கிறார்கள் மற்றொரு சாரார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஒரு மாணவிக்காக மட்டுமே குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டி குறித்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இந்த செயல்பாடும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கல்லூரி சாலைக்கு அல்ல, கல்லூரி பாதைக்கே ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை (ப) எண்: 508, நாள் : 25-08-2025 வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
இது தவறான செய்தி. கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்யப்படவில்லை, கல்லூரி பாதைக்கே/சந்து (College Lane) ' ஜெய்சங்கர் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கல்லூரி சாலையின் பெயரை மாற்றியதாகத் தவறான செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகி வருகிறது.
2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 3182, நாள்: 29-08-2025 வெளியீடு
2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் ஆட்சியர் அருண்ராஜ், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும்
TET Judgement will be on 01.09.2025
நாளை (01-09-2025) காலை பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்ற சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் மூலமாக மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும் என சற்று முன் நமது வழக்கின் வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் நமது பொதுச் செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்
எனவே நாளைய தினம் தீர்ப்பு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது
தகவல் பகிர்வு : மாநில மையம் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...
THIRAN : August Month Assessment மதிப்பெண்களை உள்ளீடு செய்யும் முறை
THIRAN: Method of entering August Month Assessment marks
THIRAN - MARKS ENTRY
அனைவருக்கும் வணக்கம்.
🎯 திறன் மாதாந்திர தேர்வு மதிப்பெண் விவரங்கள் தற்போது பதிவேற்றம் செய்ய முடியும்.
🎯 Tamil, English & Maths மாதாந்திர தேர்வு எழுதிய திறன் மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்யவும்
🎯 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சரியாக பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது EDIT OPTION இல்லை.
🎯 மதிப்பெண்கள் பதிவு செய்ய கடைசி நாள் 05-09-2025
நன்றி
Login to emis.tnschools.gov.in website
வலது மேல்புற மூலையில் உள்ள மூன்று கோடுகளை Click செய்யவும்
Thiran Assessment Option ஐ Click செய்யவும்
தோன்றும் திரையில் Exam Mark Entry என்னும் Option ஐ Click செய்யவும்
ஒவ்வொரு வகுப்பிலும் Monthly Assessment August என்பதன் கீழ் வரும் Start Button ஐ Click செய்து மதிப்பெண்களை உள்ளீடு செய்யவும்
அரசுப் பள்ளியிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ள மாணவி : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு
அரசுப் பள்ளி to அமெரிக்கா...!
அமெரிக்க வெளியுறவு துறை நிதியுதவி வழங்கும் ‘The Kennedy-Lugar Youth Exchange and Study (YES)’ எனும் திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார் ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி தட்சண்யா.
பண்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் ஓராண்டு பள்ளிப் படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவி தட்சண்யா, 11-ஆம் வகுப்பை, Belton-ல் உள்ள Heartland பள்ளியில் படித்து வருகிறார். 12-ஆம் வகுப்பை தமிழ்நாட்டில் தொடர்வார் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
செப்டம்பர் 2025 மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி
September 2025 School Calendar
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
*2025 செப்டம்பர் மாதம் - "ஆசிரியர் டைரி"*
_*02.09.2025 - செவ்வாய்க்கிழமை*_
கலைத் திருவிழா குறுவட்ட அளவில் வெற்றியாளர்கள் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்.
_*05.09.2025 - வெள்ளிக்கிழமை*_ `ஆசிரியர் தினம் _ டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
&
`மீலாடி நபி`- அரசு விடுமுறை
_*06.09.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
BEO அலுவலகம்.
_*08.09.2025 - திங்கள் கிழமை*_
*TNTET தாள் I & II* விண்ணப்பிக்க கடைசி நாள்
_*13.09.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
DEO அலுவலகம்
_*15.09.2025 - திங்கள் கிழமை*_
6-9 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
_*Inspire Award*_
விண்ணப்பிக்க கடைசி நாள்
_*கா.ந.அண்ணாதுரை*_
முன்னாள் முதலமைச்சர்
பிறந்தநாள்.
_*18.09.2025 - வியாழக்கிழமை*_
1-5 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
_*20.09.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
CEO அலுவலகம்.
_*26.09.2025 - வெள்ளிக்கிழமை*_
முதல் பருவம்/ காலாண்டு தேர்வு முடிவு.
_*27.09.2025 - சனிக்கிழமை*_
முதல் பருவம்/ காலாண்டு தேர்வு விடுமுறை.
_*06.10.2025 - திங்கள் கிழமை*_
இரண்டாம் பருவம் தொடக்கம் பள்ளி திறப்பு.
`குறிப்பு` :
இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 5 மற்றும் 21 ஆம் தேதிகள் அரசு விடுமுறை தினத்தில் உள்ளது.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2025 : School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கேரளாவில் அதிகரித்து வரும் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு : பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
கேரளாவில் அதிகரித்து வரும்
அமீபா மூளைக் காய்ச்சல் பாதிப்பு...
மூளைக்காய்ச்சலுக்கு காரணமாக
இருப்பது
"நிக்லேரியா ஃபவுலேரி" (Naeglaria fowleri) எனும் ஒரு செல் உயிரி.
அமீபா என்று உயிரியலில் படித்திருப்போம் தானே..?
அந்த வகையைச் சேர்ந்த
பாக்டீரியாக்களை உணவாக உட்கொள்ளும் ஒரு செல் உயிரி இது.
இந்த நிக்லேரியா - அசுத்தமான குளம் , குட்டை , முறையாக க்ளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்கள் போன்றவற்றில் காணப்படும்.
குறிப்பாக குளிர்ச்சியான நீரை விடவும் வெப்பமான வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்டவை.
இந்த அமீபாக்கள் தேங்கியிருக்கும் நீரின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சேறு சகதியில் வாழும்.
நீரை குளிக்கும் போது கலக்கும் போது மேலே எழும்பி நீரில் கலந்திருக்கும்.
இத்தகைய அமீபாக்கள் வாழும் நீரில்
குளிக்கும் போது மூக்குக்குள் நீர் புகும் நிலை ஏற்படும் போது
மூக்கினுள் க்ரிப்ரிஃபார்ம் தகடு என்ற எலும்பு உள்ளது. இந்த எலும்பில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கும். அதன் வழி நம் நுகர்தலுக்குத் தேவையான நரம்பு கிளை பரப்பி நாசியின் சுவர்களுக்குள் படர்ந்திருக்கும்.
இந்த அமீபா இருக்கும் நீரை மூக்குக்குள் உள்ளிளுக்கும் போது
நுகர்தலுக்கான நரம்பில் ஒட்டிக்கொண்டு மேலே மூளை நோக்கி ஏறிச்செல்லும் தன்மை கொண்டது.
உள்ளே நுழைந்ததில் இருந்து மூன்று முதல் பத்து நாட்களுக்குள்
நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
முதலில் தீவிர காய்ச்சல்
அடங்காத தலை வலி
என்று ஆரம்பித்து பிறகு
மூளைக்காய்ச்சில் அறிகுறிகளான
பின் கழுத்துப் பகுதி இறுக்கம்
குமட்டல் / வாந்தி
தலை சுற்றல்
வலிப்பு ஏற்படுதல்
பேதலிப்பு நிலை
மூர்ச்சை நிலை
கோமா
இறப்பு ஏற்படக்கூடும்
இந்த அமீபா - நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால் இதற்கு மூளை திண்ணும் அமீபா என்ற பெயரும் உண்டு.
பெரும்பாலும் நோயின் அறிகுறிகள் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் மரணம் சம்பவிக்கும்
மரணத்திற்கான முக்கிய காரணம்
இந்த நோயின் அறிகுறிகள் அனைத்தும்
பாக்டீரியா எனும் மற்றொரு ஒரு செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சல் போன்றே இருக்கும் என்பதாலும்
இந்த அமீபா தொற்று அரிதிலும் அரிதானது என்பதாலும்
நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் - வேனில் காலங்களில் குளம் குட்டைகளில் நீச்சல் குளங்களில் அதிகமானோர் நீராடும் வழக்கம் உள்ளது.
எனவே கட்டாயம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவர்களுக்கும் பொது மக்களுக்கும் இருப்பது பல உயிர்களைக் காக்கும்.
இந்தக் கிருமித் தொற்று ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது.
இந்த அமீபா தொற்று - பாக்டீரியா தொற்று போலவே தெரிந்தாலும்
பாக்டீரியா கொல்லிகள் என்றழைக்கப்படும் ஆண்ட்டிபயாடிக்குகளுக்கு அடங்காது.
இதற்கென பிரத்யேகமான மருந்தாக
ஆம்ஃபோடெரிசின் - பி என்பது விளங்குகிறது.
ஆம்... கோவிட் தொற்று ஏற்பட்ட காலத்தில் உப கொள்ளை நோயாக உருவெடுத்த கருப்பு பூஞ்சை ( ம்யூகார் மைகோசிஸ்) தொற்றுக்கு இந்த மருந்து தான் கேட்டது.
இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை
சரியான நேரத்தில் கணித்து
மூளை தண்டு வட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து
உடனடியாக ஆம்ஃபோடெரிசின்- பி சிகிச்சை வழங்கிட வேண்டும்.
தமிழ்நாட்டில் நிக்லேரியா தொற்றுக்கு உள்ளான 47 வயது நபர் ஒருவருக்கு சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டதில் உயிர்பிழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களை தின்று முடிப்பதற்குள் விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல.
அதனாலேயே இந்த நோயின் இறப்பு உண்டாக்கும் சதவிகிதம் கிட்டத்தட்ட 100%
இதுவரை உலகில் ஐநூறுக்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக மருத்துவ ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தியாவில் ஐம்பதுக்கும் குறைவான ஆதாரங்களே பதிவாகி உள்ளன.
எனினும் முறையாகப் ஆவணப்படுத்தப்படாத
ரிப்போர்ட் செய்யப்படாத
அல்லது தவறுதலாக பாக்டீரியாவினால்/ வைரஸினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் என்று ஆவணப்படுத்தப்பட்ட நோயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.
இந்தியாவில் இறப்பிற்கான காரணங்களை பிரேதக் கூறாய்வு மூலம் அறிவது மருத்துவ- சட்ட ரீதியான வழக்குகளுக்கு மட்டுமே கட்டாயமாக உள்ளது என்பதால்
இது போன்ற மூளைக்காய்ச்சல் மரணங்களில் இந்த அமீபா தொற்றின் பங்கு குறித்து நம்மால் சரியான எண்களை அறிய முடியாமல் போகிறது.
இந்த அமீபா தொற்று ஏற்படாமல் எப்படி காத்துக் கொள்வது?
- தேங்கி இருக்கும் குளம் குட்டை கண்மாய் போன்றவற்றின் அடிப்பகுதி சகதியை இயன்றவரை கிளறி விடாமல் குளிப்பது நல்லது
- இத்தகைய தூய்மையற்ற நீரில் மூழ்கிக் குளிப்பதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இந்த அமீபா மூக்கு துவாரம் வழியாக மட்டுமே மூளையை அடைய முடியும்.
அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் அந்த நோய் ஏற்படுவதில்லை.
எனவே மூக்குப் பகுதிக்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- நீச்சல் குளங்களில் சரியான முறையில் க்ளோரினேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
நீச்சல் பயிற்சி செய்யும் போது நோஸ் க்ளிப் அணிந்து கொள்வது சிறந்தது.
- சில நேரங்களில் அசுத்தமான நீரில்
மூக்கு துவாரங்களைக் கழுவுவதாலும் இந்த தொற்று பரவக்கூடும். இஸ்லாமியர்கள் - தொழுகைக்கு முன்பு செய்யும் ஒளு எனும் தூய்மை செய்யும் முறையில் மூக்கு நாசிக்குள் நீரை உறிஞ்சி சுத்தப்படுத்துவர். அத்தகைய நீர் தூய்மையானதாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- இது போன்ற குளம் குட்டை கண்மாய்களில் குளித்த பத்து நாட்களுக்குள் காய்ச்சல் / தலைவலி / கழுத்துப் பகுதி இறுக்கம் / வலிப்பு போன்றவை ஏற்படின் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி
மருத்துவரிடம் தாங்கள் எப்போது? எங்கு? குளித்தோம் என்பதை தெளிவுபடுத்திட வேண்டும்.
இது விரைவில் நோயைக் கண்டறிய உதவும்.
குளம், குட்டைகளில் கண்மாய்களில் நீச்சல் குளங்களில் குளிக்கும் அனைவருக்கும் இந்தத் தொற்று ஏற்படுவதில்லை.
அரிதிலும் அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது.
அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொருத்தும் அமைகிறது.
எனவே இந்தத் தொற்று குறித்த அதீத அச்சம் தேவையற்றது.
மாறாக நிறைய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்தும் அமீபா வாழும் நீர்நிலைகள் குறித்தும் விழிப்புணர்வு அதிகம் இருக்கும்.
காலநிலை மாற்றங்களுக்கு உட்பட்டு வரும்
வெப்ப மண்டல நாடான நமக்கும் அத்தகைய விழிப்புணர்வு தேவை என்பதே இந்தப் பதிவின் நோக்கம்.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - அடிப்படை விதிகள் மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை (நிலை( எண்: 47, நாள் : 29-08-2025 வெளியீடு
Rules - Rule 56(1)(c) of the Fundamental Rules Not permitting to retire but retaining in service - Amendments to the Fundamental Rules and the Tamil Nadu Leave Rules - Orders - Issued
விதிகள் - அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) ஓய்வு பெற அனுமதிக்காமல் ஆனால் பணியில் தக்கவைத்துக்கொள்வது - அடிப்படை விதிகள் மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தங்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
Avoidance of the practice of suspension of government employees on the day of retirement - Amendments to the Basic Rules and Tamil Nadu Leave Rules, Government Order G.O. (Ms) No.: 47, Dated: 29-08-2025 Issued
தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 47
ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - அடிப்படை விதிகள் மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
01-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சேமிப்பு பற்றிய சில ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார போட்டிகள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகை ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா.
⭐️அஸ்வினி : வேறுபாடுகள் விலகும்.
⭐️பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐️கிருத்திகை : மதிப்புகள் உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
வியாபாரத்தில் வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் புரிதல்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான பயணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். பகை விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.
⭐️கிருத்திகை : முடிவுகள் கிடைக்கும்.
⭐️ரோகிணி : புரிதல்கள் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய வேலையாட்கள் மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : வேறுபாடுகள் விலகும்.
⭐️திருவாதிரை : ஆர்வம் ஏற்படும்.
⭐️புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். அரசு காரியத்தில் அனுசரித்து செல்லவும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சினம் மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு.
⭐️புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️பூசம் : அமைதியான நாள்.
⭐️ஆயில்யம் : மேன்மை ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிற இன மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நண்பர்கள் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த வரவுகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு.
⭐️மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️பூரம் : வேறுபாடுகள் விலகும்.
⭐️உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைப்பட்ட வரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
⭐️அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️சித்திரை : மனக்கசப்புகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறைகளில் மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இறை காரியத்தில் ஈடுபாடுகள் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மதிப்புகள் உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
⭐️சித்திரை : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
⭐️சுவாதி : புரிதல் உண்டாகும்.
⭐️விசாகம் : மதிப்புகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். புரியாத சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். அமைதி வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை
⭐️விசாகம் : தெளிவுகள் ஏற்படும்.
⭐️அனுஷம் : புரிதல்கள் ஏற்படும்.
⭐️கேட்டை : கட்டுப்பாடுகள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். அன்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மூலம் : தெளிவுகள் ஏற்படும்.
⭐️பூராடம் : ஈடுபாடும் அதிகரிக்கும்.
⭐️உத்திராடம் : மதிப்பளித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவல் பணிகளில் பொறுப்புகள் உயரும். சமூக தொடர்பான புதிய கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மறதி விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்.
⭐️உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️திருவோணம் : பொறுப்புகள் உயரும்.
⭐️அவிட்டம் : தொடர்புகள் விரிவடையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். தடைப்பட்டு போன சில காரியங்கள் முடியும். உறவுகள் மத்தியில் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️அவிட்டம் : குழப்பங்கள் விலகும்.
⭐️சதயம் : விரயங்கள் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல்கள் ஏற்படும். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உடற்பயிற்சி செயல்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
⭐️உத்திரட்டாதி : புதுமையான நாள்.
⭐️ரேவதி : மாற்றம் ஏற்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
29-08-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய மாற்றம் ஏற்படும். வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும் வாய்ப்புகளும் ஏற்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து செயல்படவும். ஆன்மிக பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் . உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.
⭐️பரணி : சிந்தித்து செயல்படவும்.
⭐️கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உருவாகும். உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் அமையும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மனதளவில் குறையும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்.
⭐️கிருத்திகை : அனுபவங்கள் கிடைக்கும்.
⭐️ரோகிணி : சங்கடம் நீங்கும்.
⭐️மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். கல்வியில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். போட்டி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️திருவாதிரை : ஆர்வமின்மை ஏற்படும்.
⭐️புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் சேர்ப்பது குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புகழ் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.
⭐️புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம்
⭐️பூசம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் உருவாகும். கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய எலக்ட்ரானிக்கல் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.
⭐️மகம் : மாற்றங்கள் உருவாகும்.
⭐️பூரம் : தீர்வுகள் கிடைக்கும்.
⭐️உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
சூழ்நிலை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். அரசு காரியத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய இலக்குகள் பிறக்கும். தாமதம் விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
⭐️அஸ்தம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.
⭐️சித்திரை : இலக்குகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். முயற்சி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.
⭐️சித்திரை : அலைச்சல் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : பொறுமை வேண்டும்.
⭐️விசாகம் : போட்டிகள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது விவேகம் வேண்டும். சக ஊழியர்களால் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.
⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️அனுஷம் : கவனம் வேண்டும்.
⭐️கேட்டை : சங்கடங்கள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட கவனம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். புதிய கல்வி குறித்த தேடல்கள் அதிகரிக்கும். ஆதரவு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மூலம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️பூராடம் : கவனம் பிறக்கும்.
⭐️உத்திராடம் : தேடல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவுகளின் பலம் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவால் நினைத்தது நிறைவேறும். விளையாட்டு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.
⭐️உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
⭐️திருவோணம் : வெற்றிகரமான நாள்.
⭐️அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
வரவுகளில் இருந்த தடைகள் விலகும். புதிய விஷயங்களில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தடையாக இருந்தவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️அவிட்டம் : தடைகள் விலகும்.
⭐️சதயம் : குழப்பங்கள் மறையும்.
⭐️பூரட்டாதி : புரிதல்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது தெளிவை ஏற்படுத்தும். வேலையாட்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் இன்மை உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : சச்சரவுகள் நீங்கும்.
⭐️உத்திரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.
⭐️ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
SMC உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது TNSED Parents Appல் இம்முறை கூடுதல் Options
SMC உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது TNSED Parents Appல் இம்முறை Present/ Absent/ Vacant என்கின்ற 3 options இருக்கும்.
* Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக கிராமப்புற உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திட தகவல். உறுதிப்படுத்திக் கொள்ளவும். நகர்புற உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு வழக்கம்போல வருகைப்பதிவு செய்யலாம்
* உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தேவையில்லை. ஒருவேளை கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தால் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு Attendance போட வேண்டாம்.
04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள் *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...