Sunday, 31 August 2025

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 

 


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு


5 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் கால அளவைக் கொண்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கால அளவு பெற்றுள்ள ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


29/7/2011க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்.


29-07-2011க்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


ஒரு ஆசிரியர் தனது பணியை தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது


 ஆசிரியர் தகுதி தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் அவர் அடுத்த நிலை பதவி உயர்வை அடைய முடியும் என்றும் தீர்ப்பு


 பதவி உயர்வைத் தாண்டி பணியில் தொடரவே ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமானது


இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள் வருமாறு..


 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்.


 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..


 பதவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



தீர்ப்பின் முழுமையான விவரம் விரைவில்...





No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...