Sunday, 31 August 2025

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி

 

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி


Supreme Court's verdict in the case of Teacher Eligibility Test is mandatory for promotion



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 







பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 

 


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு


5 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் கால அளவைக் கொண்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கால அளவு பெற்றுள்ள ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


29/7/2011க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்.


29-07-2011க்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


ஒரு ஆசிரியர் தனது பணியை தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது


 ஆசிரியர் தகுதி தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் அவர் அடுத்த நிலை பதவி உயர்வை அடைய முடியும் என்றும் தீர்ப்பு


 பதவி உயர்வைத் தாண்டி பணியில் தொடரவே ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமானது


இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள் வருமாறு..


 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்.


 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..


 பதவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



தீர்ப்பின் முழுமையான விவரம் விரைவில்...





UDISE+ - முக்கியமான தகவல்கள்

 

 

UDISE+ - VERY IMPORTANT INFORMATION


Respected All,


The Student Profile ( *EP GP & FP* ) and *Add Student* option for new admissions will be enabled from September 1, 2025.


 *Please note that* Aadhaar is mandatory for all students. Admissions without Aadhaar will not be accepted. This is to ensure that all students obtain their Aadhaar.


 *Important Note:* 

If a student was admitted last year without an Aadhaar and their details are not reflected in the system, kindly instruct the parents to get Aadhaar for their child. Aadhaar enrollment facilities are available through government channels—please encourage parents to utilize them.


 *Admission Process Guidelines:* 


Direct admission is allowed only for Grade 1, LKG and UKG.


For higher classes, students must be imported from the drop box if the student is in Dropbox. 


If the student is active from another school, their details must be pulled using the " *Student Raise Request"* option.


Regarding the Aadhaar MBU verification and Student Raise Request reports, we have requested student-level reports, which will be made available in the coming days.


 *Note* :


 As previously informed, all necessary data should be kept ready for updating. *The two options will be enabled only from monday*.



ஒற்றை மாணவனுக்கு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் செலவிடும் பள்ளிக்கல்வித்துறை

 




கன்னியாகுமரியில் ஒற்றை  மாணவனுக்கு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் செலவிடும் பள்ளிக்கல்வித்துறை


கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள இரத்தினபுரம் என்ற கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஐந்து வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் படிக்கிறார்.


அதைவிட ஆச்சரியம் அந்த ஒரு மாணவனுக்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது.


நான்காம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்காக தமிழ்நாடு அரசின் முயற்சி அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இந்தப் பள்ளியில் இந்த ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


அதுமட்டுமல்ல, இந்த மாணவனுக்கு விசாலமான வகுப்பறை, பெரிய கலையரங்கம் என அனைத்து வசதிகளும் உள்ளது.


மாதம் சுமார் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெறும் இந்த இரு ஆசிரியர்களும், ஒரு மாணவனின் வருகையை எதிர்நோக்கி அன்றாடம் பள்ளியில் காத்திருக்கின்றனர்.


ஆண்டுக்கு சுமார் 24 லட்ச ரூபாய் செலவில் இந்த மாணவனின் கல்விக்காக பள்ளியைத் திறந்து வைத்திருக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் இந்த நடவடிக்கை , இப் பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு மாணவனுக்காக இவ்வளவு செலவு செய்து பள்ளியை நடத்த வேண்டுமா? என்று ஒரு சிலர் கேட்கையில், ஒரு குழந்தை என்றாலும், கல்விக்காக அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது தானே என்கிறார்கள் மற்றொரு சாரார்.


சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஒரு மாணவிக்காக மட்டுமே குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டி குறித்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இந்த செயல்பாடும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

கல்லூரி சாலைக்கு அல்ல, கல்லூரி பாதைக்கே பெயர் மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 

 


கல்லூரி சாலைக்கு அல்ல, கல்லூரி பாதைக்கே ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம்  - தமிழ்நாடு அரசு அரசாணை (ப) எண்: 508, நாள் : 25-08-2025 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டதாக  செய்திகள் பரவி வருகிறது.


இது தவறான செய்தி. கல்லூரி சாலைக்கு (College Road) பெயர் மாற்றம் செய்யப்படவில்லை, கல்லூரி பாதைக்கே/சந்து (College Lane) ' ஜெய்சங்கர் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால், கல்லூரி சாலையின் பெயரை மாற்றியதாகத் தவறான செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகி வருகிறது. 




2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம்

 


2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 3182, நாள்: 29-08-2025 வெளியீடு


2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


பெரம்பலூர் ஆட்சியர் அருண்ராஜ், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.




பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் : உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது

 


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு  அவசியம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும்


TET Judgement will be on 01.09.2025


நாளை (01-09-2025) காலை பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு  அவசியம் என்ற சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் மூலமாக மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும் என சற்று முன் நமது வழக்கின் வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் நமது பொதுச் செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்


எனவே நாளைய தினம் தீர்ப்பு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது


தகவல் பகிர்வு : மாநில மையம் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி



 

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...





பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி

  பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி Supreme Court's verdict in the case o...